Thursday, December 14, 2006

அமௌனன் சிறுகதை


அகதி வாழ்வில்
அருவருப்பொன்றும்
அவ்வளவாயிருந்ததில்லை
வாயுள் சலங்கழித்த
சமாதானச்சிப்பாயின் மூத்திரப்போக்கியை
கடித்தெடுக்க முடியாத
இயலாமையை விட….
--காருண்யன்

வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…

நான் தீபன் ராஜ் மூண்டு பேரும் ஒரு செட். நாவல் பழம் புடுங்க முனியப்பர் கோவில் காட்டுக்கு போறதிலயிருந்து பள்ளிக்கூடம் போய் வாறது வரை எங்களை யாரும் தனித்தனியாப் பாக்கேலா அவ்வளவு ஒட்டு. நாங்கள் செய்யுற குறளி விஷயங்கள் கனக்க இருக்கு. கெட்டப்போலால தியாகண்ணை வீட்டு மாமரத்தில மாங்காய் அடிக்கிறது வீட்டில சொல்லாமக் கொள்ளாம நீச்சல் பழகிறது பேப்பர் ரொக்கட் செய்து ரோட்டில போற வாற ஆக்களுக்கெல்லாம் விடுறது எண்டு நிறைய. ஆனா அதெல்லாத்ததையும் விட போன வருசம் நாங்கள் தெரிஞ்சு கொண்ட விசயம் சூப்பரான ஒண்டு.
போன வருசம் நாங்கள் ஆறாம் ஆண்டில இருந்தம். நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கேக்கை தான் ஆமி மாமாக்கள் எங்கடை ஊரை பிடிச்சவை. தீபன் வீட்டுக்கு முன்னால இருக்கிற யோகமன்ரி வீட்டை வைபோசா எடுத்து சென்ரிப் பொயின்ற் ஒண்டும் போட்டிட்டினம். கிட்டடியில கூட யோகமன்ரி சித்திராக்காவுக்கு கலியாணம் தள்ளிப் போகுது, சீதனம் குடுக்க வீடும் காணியும் வேணுமெண்டு ஆமிப் பெரியவரிட்ட கடிதம் குடுத்தவா.
ஆமி மாமாக்கள் வந்த புதிசிலை அவையின்ர தொப்பியளையும் துவக்குகளையும் கண்டு நாயள் வெருண்டது போலவே நாங்களும் பயப்பிட்டுப் போனம் - ஆனால் - போகப் போகப் பழகிற்றுது. காலமையில ரோந்து போகேக்க எங்களைப் பாத்து சிரிப்பினம். ஆமி மாமாக்கள் கன்ரீன் ஒண்டையும் இப்ப திறந்து போட்டினம். இப்பெல்லாம் அவையக் கண்டா நாயள் மாத்திரம் குலைக்கும்.
தீபன்ட அம்மா தூரத்து ஊரொண்டில ரீச்சராயும் அப்பா வீ.சீ கிளாக்காயும் இருக்கினம். என்ர அப்பாவும் தீபன்ட அப்பாவும் வெளி நாட்டில இருக்கினம். என்ர அம்மா லைபிறறியனா இருக்கிறா.
நான் ஆறாமாண்டுக்கு வந்த புதிசில பயப்பிடாம இருக்க காட்டித்தந்தது தீபன் தான். ஆனா கொஞ்ச காலத்திலேயே அவன் என்னை விட்டு பிரிஞ்சு போற மாதிரி - அதான் படங்கள்ல வருமே அது போல- இருந்துது.
தீபன்ட அம்மா சுயிங்கம் சாப்பிட விடுறேல்லை ஆனா அவன் நிறய சுயிங்க ஸ்டிக்கர் வைச்சிருந்தான். அதயெல்லாம் காட்டி சேட் கொலர தூக்கி சண் காட்டுவான். போதாக்குறைக்கு முந்தின மாதிரி பட்டமேத்தவோ கெந்திதட்டு விளையாடவோ அவன் வாநறேல்லை. முந்திரியம்பழம் ஆயக்கூட வாறேல்லை. எனக்குச் சரியான கவலையாவும் எரிச்சலாவும் இருந்துது. இவனிட்ட கண்ணக் கட்டி கோபம் போட்டா அன்டனி, ஜீட் ஆக்களோட தான் பழக வேணும். அவங்களோட கூட்டு சேந்தா அணில் முயல் வளக்கிறது சிப்பி சோகி சேர்க்கிறது எண்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா தீபன் வீட்டில போய் அண்டிக்குடுத்தானெண்டால் திரும்ப மஞ்சள் தண்ணியும் உப்பு பிரம்பும் தான். கோபமா நேசமா எண்டு விரல் நீட்டினா நேசம் எண்டு தான் சொல்லுறான். ஆனா கதைக்க வேணுமெண்ட அவற்ற கெண்டிசனுகளுக்கு ஒப்ப வெணுமாம். அவருக்கு நான் ஏழு வயசு குறச்சலாம் அவருக்கு சிங்களம் தெரியுமாம் (எக்காய் தெக்காய் துனாய் கத்தா கறண்ட எப்பா) எனக்குத் தெரியாதாம்.அதால மரியாதை தர வேணுமாம்.
எனக்கு எரிச்சல் எரிச்சலா வந்துது.ஆனா எனக்கும் சிங்களம் படிக்க விருப்பம்.அப்ப தானே இவனை மடக்கலாம்.எரிச்சலை அடக்கிக்கொண்டு எங்க தீபண்னா சிங்களம் படிச்சனீங்கள் எண்டு மரியாதயாக் கேட்டன்.நான் அண்ணை போட்டகொண்ண ஆளுக்குப் புளுகம் தலைக்கேறிப்போட்டுது. சனிக்கிழமை தன்ர வீட்ட வந்தா எல்லாம் சொல்லுறதா சொல்லீற்றுப் போயிற்றான்.
சனிக்கிழமையண்டு அவன்ட வீட்ட போனன். தீபன் எண்டு கூப்பிட உன்னின நாக்கை அடக்கி "தீபனண்ணா" எண்டு கூப்பிட்டன். "கேட் திறந்து தான் கிடக்கு திற்ந்து கொண்டு வா " எண்டு பதில் வந்துது.கேட் கிறீச் சத்தம் போட எனக்கு பயம் பயமா வந்துது. தீபன் வாசல்ல ஒரு மாதிரியா சிரிச்சுக்கொண்டு நிண்டான்.உள்ள கூட்டிக்கொண்டு போய் கொம்பாசுக்குள்ளால நூறு ரூவாய்த் தாள் எடுத்துக் காட்டினான்.பிறகு விளயாட்டுத் துவக்கு கண்டோஸ் மின்னி எண்டு கனக்க காட்டினான். நான் எல்லாத்தையும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருந்தன். அன்ரி கண்டாலும் எண்ட பயத்தில எல்லாத்தயும் ஒளிக்கச் சொன்னன். அவன் அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் போயிற்றினம் எண்டும் மத்தியானச் சாப்பாடு பாண் தான் எண்டும் சொன்னனான்.
"எங்காலயடா தீபன் உனக்கு இவ்வளவு சாமான்?" எனக்குத் தெரிஞ்சு கிட்டடியில வெளிநாட்டுச் சொந்தக்காரர் ஒருத்தரும் வரேல்லை.
முறைத்தான். 'போடா... புcensored."
'அன்ரி தீபன் தூஷணம் கொட்டுறான்" தீபன் கோள்மூட்டி எண்டு திட்டி தலயில குட்டினான். வீட்டில ஆருமில்லை எண்டது திரும்பவும் ஒருக்கா விளங்கிச்சுது.கண் எல்லாம் கலங்கி சொண்டு துடிக்கிறதப் பாத்து தீபன் சமாதானமா இறங்கி வந்து 'சரி இனிமெ இப்பிடி அண்டிப் பழகாத' எண்டான்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த்தான்.பிறகு உள்ள போய் மயிலிறகு கொண்டு வந்து தான் சொல்லப்போறதை ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினான். பிறகும் அவன் பேசாமலே இருந்தான். என்னைப் பாத்துக்கொண்டே அங்கயும் இங்கயுமா நடந்தான். பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்ச படி கிட்ட வந்து
"நீ ஐஞ்சு ரூவாய்ச் சூப்புத்தடி வாங்கிச் சாப்பிடுறனியெல்லே........'
"ஒமோம் அதுக்கென்ன"
"அதுமாதிரி.....அதுமாதிரி...ஆமி மாமாக்களின்ர குஞ்censored சூப்பி விட்டா...இவளவும் கிடைக்கும்"
எனக்குப் பெரிய புதினமாய்க் கிடந்துது. ஆனா அருக்குளிக்கிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "ச்சீ! மூத்திரம்" எண்டு சொன்னன்.
"இல்லையடா மடையா!.. சின்னப்பிள்ளை மாரிக் கதைக்கிறாய். ஆமி மாமாக்களின்ர மணி எங்கட மாதிரியில்லை. அது பெரிசு ..இதரைப் பழமளவு இருக்கும் . அதைச் சுத்தி மயிரெல்லாம் இருக்கும் மூத்திரமெல்லாம் வராது."
எனக்கு அந்த வித்தியாசத்தப் பாக்க வேணும் போல கிடந்துது. அதெப்பிடி.. இவன் புருடா விடுற ஆள்த் தானே. அதில மாத்திரம் ஆள் விண்ணன்.
'பொய் சொல்லாதடா..'எண்டு கத்தினன்.
'டா' போட்டத இப்ப அவன் பெரிசு படுத்திற மாரித் தெரியேல்லை.
'நீ வேணுமெண்டா ஜான் அண்ணையக் கேட்டுப்பார். அவரும் சென்ரிக்குப் போறவர். அவர் சொல்றார் அதுக்குப் பேர் குஞ்சாமணி இல்லயாம் உண்மையான பேர் சுண்censored"
'அரியண்டமாயிருக்காதோ?" நான் மெல்லிய குரல்ல கேட்டன்.
'முதல்ல அப்பிடித் தான்.. சூப்பச் சொல்லி பண்டா மாமா வெருட்டினவர்.துவக்கால சுடுவம் எண்டு கூட ஒரு மாமா சொன்னவர்.ஆனா பிறகு அப்பிடியில்லை. எனக்கும் உம்மை மாதிரி ஒரு மல்லி இருக்கு எண்டு சொல்லி கொஞ்சுவார் - அப்பா மீசை குத்தக் குத்தக் கொஞ்சுவாரே அப்பிடி நல்லா இருக்கும். சரியாக் கூசும். சிங்களம் சொல்லித் தருவார். என்னட்டத் தான் அவர் தமிழ் படிக்கிறவர். கன்ரீன் ரொபியள் எல்லாம் எனக்குத் தான்.'
தீபன் சொல்லச் சொல்ல எங்கும் சரியான விருப்பம் வந்துது. எவ்வளவு நல்லாயிருக்கும் சுயிங்கம் ஸ்டிக்கர் ரொபி நூறு ரூவாய்த்தாள்...........ஒருக்காப் போய்ப் பாப்பம்.
பதினொரு மணியப்பிடி தீபன் ரோட்டடிக்குப் போய் தெரிஞ்ச முகங்கள் நடமாடுதோ எண்டு ரெக்கி பாத்தான். ஒருத்தரும் இல்லாத ஊட்டில சடாஸெண்டு பொயின்ற்றுக்குள்ள போட்டான் - என்னையும் இழுத்துக்கொண்டு. நான் முழி முழியெண்டு முழிச்சுக்கொண்டு நிண்டன். ஆமிக்கார மாமா என்னை ஆரெண்டு தீபனிட்ட கேட்டிச்சினம். 'தீபன் மை பிரெண்ட்' எண்டு இங்கிலிசு பேசினான். ஆமி மாமா என்ர கொட்டயப் பிடிச்சு நசிச்சு 'ஆ! குண்டு பொம்." எண்டார். தீபனும் மற்ற மாமாவும் விழுந்து விழுந்து சிரிச்சினம். தீபன் அவரை பண்டா அங்கிள் எண்டு கூப்பிடச் சொன்னான். பண்டா மாமா அதில நிண்ட இன்னொரு மாமாட்ட என்னமோ சொல்லிட்டு எங்கள் இரண்டு பேரையும் பங்கருக்க கூட்டிப்போனார். தீபன் சொன்னது மாதிரியே அவற்ற குcensored வாழைப்பழம் மாதிரிப் பெரிசு தான். ஆனா அவற்ர நிறம் சிவப்பு ஏன் மணி மட்டும் கறுப்பு எண்டது தான் எனக்குப் பெரிய சந்தேகம். அதின்ர மணம் எனக்குப் பிடிக்கவே இல்லை. மாமா கொஞ்சினது தடவினது எல்லாம் நல்லா இருந்துது. ஆனா கடைசியா மணியிலேர்ந்து வந்தது தான் என்னகுப் பிடிக்கேல்லை.உண்மையாவே அரியண்டமா இருந்துது. துப்பிப் போட்டன். பண்டா மாமா கன்னத்தில தட்டிச் சிரிச்சுப் போட்டு ஒதுக்கப் போய் சூச்சா விட்டார். எனக்கு ஒங்காளம் ஒங்காளமா வந்துது. தீபனப் பாத்து நெருமினன். 'என்னடா இது மூக்குச் சளி மாதிரி.....ச்சீ..!' அவன் தனக்கும் முதல்ல இது போலத்தான் இருந்தது எண்டு சமாதானம் சொன்னான். எனக்கு அழுகை அழுகையா வந்துது. ஆனா ஆமி மாமா ஐஸ்கிறீமுக்கு காசு தந்தகொண்ண கோபமெல்லாம் காணாமப் போட்டுது.
இதுக்குப் பிறகு கிழமையில இரண்டு மூண்டு தரம் நான் சென்ற்றிக்குப் போகத் தொடங்கீட்டன். ஒரு நாள் பண்டா மாமா சிங்களத்தில என்ர பேரை எழுதித்தந்தார். வகுப்பில அத்தனை பேருக்கும் காட்டி சேட் கொலரைத் தூக்கி விட்டன். தீபனை விட நான் நல்ல பாஸ்ராவே சிங்களம் படிச்சிட்டன். பண்டா மாமா சில நேரம்தான் சூப்பச் சொல்லுவார். பிறகு சின்னப்பிள்ளயள் தமிழ்கதைக்கிற ஸ்ரைல்ல கதை சொல்லுவார். மடியில ஏத்திவச்சு முள்ளுத் தாடியால உரஞ்சி உரஞ்சி சிரிப்பார். பிறகு பேசாமல் இருப்பார். ஒருக்கா கட்டிப் பிடிச்சு அழுதவர். அவர் சொல்லித்தந்த பாட்டுப் போல எங்கட மிஸ்ஸும் ஒரு பாட்டுச் சொல்லித்தந்தவா - குருவிக் குஞ்சே குருவிக் குஞ்சே எங்கே போகிறாய்.... நான் சிங்களப் பாட்டை தமிழில கொப்பின்ர பின்பக்கம் எழுதி வச்சிருந்தன்,

குருளுப் பஞ்சோ குருளுப் பஞ்சோ
கோய்பத யன்னே..
கொட்டல கொட்டல தான்ய கபலி
கன்னட்ட யன்னே.


புஞ்சிலன் பட்டியோ புஞ்சிலன் பட்டியோ
கொய்பத யன்னே
கொந்தட்ட இதுனு அம்பக்கொட்டியக்
கன்னட்டயன்னே


எலுபட்டியோ எலுபட்டியோ
கோய் பதயன்னே
நுக கொல கலாத்துறுன்
கன்னட்ட யன்னே


புஞ்சி பபோ புஞ்சி பபோ
கொய்பத யன்னே
ஸ்கோலட்டக் கொஸ்பாட கிய
கரனட்ட யன்னெ

*
நானும் தீபனும் இதயெல்லாம் ராஜிட்ட சொல்ல அவன் கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டே கிணத்தடிக்கு குளிக்க வாற ஆமி மாமாக்கள் பற்றிச் சொன்னான். அசுகிடாக் கள்ளன்.
நிறய விளையாட்டுச் சமான்கள் ரொபியள் கண்டோசுகள். எங்களுக்குச் சரியான சந்தோஷம்.
ஆமி மாமாக்கள் ஜான் அண்ணாவுக்கு நிறய வீடியோ கொப்பியள் குடுத்திச்சினம். ஜானண்ணா அதயெல்லாம் எங்களுக்கும் போட்டுக் காட்டினான். ஆம்பிளயளும் பெம்பிளயளும் உரிஞ்சாங் குண்டியோட வருவினம். அவை செய்யுற ஒவ்வொண்டுக்கும் ஜானண்ணா பேர் சொல்லித் தந்தான். அவனோட ஓ.எல் படிக்கிற அண்ணை மாரும் வந்திருந்து படம் பாக்கிறவை. அந்தப் படங்கள்ல வாற மாதிரி ஜானண்ணா ஒருநாள் ஆட்டிக் காட்டினான். எங்களுக்கு அது ஏலாமப் போட்டுது. நாங்கள் சாமத்தியப் படேல்லை எண்டு எல்லாருஞ் சேந்து நக்கலடிச்சாங்கள்.
எங்களுக்கு கோபம் கோபமா வந்துது. ஆமிக்கார மாமாட்டப் போய் அவனச் சுடச் சொன்னம். ஆமி மாமா சிரிச்சிட்டு எல்லருக்கும் சுயிங்கம் தந்தார். அவர்லயும் எங்களுக்கு கோபம்.
இந்தக் கோபம் பண்டா மாமா வெளிசக் கூடுகளைத் தந்த கொண்ண எந்தப் பக்கமா போச்சுது எண்டே தெரியேல்லை. வெள்ளை நிறத்தில நல்ல வடிவான வெளிச்சக்கூடுகள்.
சரி அதை விடுங்கோ. விஷயத்துக்கு வருவம் உங்களுக்கு வெள்ளைக்கலரில வடிவான வெளிச்சக் கூடுகள் வேணுமெண்டா அடுத்த சனி தீபன் வீட்ட வாங்கோ.........
நாங்கள் உங்களை ஒரு இருண்ட பங்கருக்கை கூட்டிப் போவம்.
அதுக்குப் பிறகு வடிவான வெள்ளை நிற வெளிச்சக்கூடுகள் உங்களுக்குக் கிடைக்கலாம்,

*********************************


-அதீதன்-
வெளித் தோன்றும் மறுபாதியின் கதை


நிறப்பிரிகை, கிரணம் போன்ற இதழ்கள் சமப்பாலுறவின் மீதான வழிமொழிதல்களை முன்வைத்ததன் பின் தமிழ்ச் சூழலின் எதிர்வினை எதுவாக இருக்கும் என அறிய நேரும் வாசகன் அச்சூழலின் சனாதனம் குறித்து அதிர்ச்சியடைய நேர்கிறது. கோட்பாடாக மாத்திரம் அற்முகமாகியதால் சமப்பாலுறவு வெளி குறித்த புரிதல்கள் தட்டையாக நிகழ்ந்திருக்கலாம் என்னும் புரிதலின் அடிப்படையில் தமிழக இலக்கிய-தத்துவப் புலத்தின் எதிர்வினையை உள்வாங்க முடிகிறது.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள் சமபாலுறவு வெளி மீது தேவையான கவனிப்பைச் செலுத்தியுள்ளன. சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறை, அவ்வுறவு வெளியின் அரசியல் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த முனைந்த அவரது பிரதிகளுக்கு நமது எதிர்வினை எதுவாக இருந்தது?
83 இனக்கலவரத்தின் பின்னணியில் நிகழும் கதையினைக் கொண்ட ‘Funny Boy’ வெளிவந்து எத்தனை வருடங்கள்? ஷ்யாம் செல்வதுரை ஒரு தமிழர். ‘Funny Boy’இன் முக்கிய பாத்திரமான அர்ஜி செல்வரட்னம் ஒரு தமிழன். நாவலில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அட்டூழியங்களும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாவல் சர்வதேச ரீதியிலான கவனத்தையும் பெற்ற ஒன்று. நம் புகழ் பெற்ற வெளி ஒதுக்கல் கொள்கையின்படி இந்த நாவல் நிராகரிக்கப்பட எவ்வித நியாயங்களும் இல்லையே. ஏ.ஜே.கேயினால் எழுதப்பட்டு மு.பொவினால் மொழிபெயர்க்கப்பட்டு சரிநிகரில் பிரசுரமாயிருந்த சிறிய குறிப்பொன்றையும் யுகம் மாறும் தொகுப்பில் வெளிவந்த செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையினையும் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. எனவே, நாவல் கொண்டிருந்த சமப்பாலுறவுக் கையாள்கையே நமது ஒவ்வாமைக்குக் காரணம் என ஊகிக்க முடிகிறது.
மௌனம். மௌனம் மேலும் மௌனம். மௌனம் என்பது சாவுக்குச் சமம் என்கிறார் ஷோபா சக்தி. கொஞ்சமாவது உயிரைக் கையில் வைத்திருப்போரிடம் இருந்து காத்திரமான விவாதங்களை கோரி எழுதப்படுகிறது இக்கட்டுரை.

1
தெற்காசிய நவீனத்துவம் குரூரமான மரபுத்துண்டிப்பை நிகழ்த்திக்கொண்ட ஒன்றாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனைந்தாலும், இந்திய/இந்துத்வப் பெருமரபிலிருந்தும் காலனித்துவம் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட விக்டோரியச் சனாதன மதிப்பீடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்ட ஒன்றல்ல அது. சமப்பாலுறவு போன்ற கலகத்தன்மை மிக்க சமூகக்கூறுகளை தனது உடைக்கவியலா மௌனத்தின் மூலம் இருட்டடித்த பெருமை அதற்குரியது. சிறுமரபுகளை மீட்புருவாக்கம் செய்தலும், சொல்லப்பட்ட வரலாற்றின் மீதான கட்டுடைப்பும் மாயா-எதார்த்தவாதத்தின் வருகையினையொட்டி நிகழ்ந்தனவேயாயினும் தெற்காசியக் கலாச்சார மனம் தனக்கு உவப்பான சிறுமரபுகளை மாத்திரம் தேர்ந்தெடுத்துப் புனைந்து கொண்டது. ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, போன்ற பெருங்கதையாடல்களில் புதைந்துள்ள சமப்பாலுறவுக் கூறுகளையோ, சமப்பாலுறவுக்கென ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கிய வாத்ஸ்யாயனரையே யாரும் கண்டுகொள்வதில்லை.
மத்திய காலத் தெற்காசியாவில் எழுதப்பட்ட பாபர் சக்கரவர்த்தியின் சுயசரிதையான Tuzuki – I – bari பதின்ம வயதுச் சிறுவனின் மீது சக்கரவர்த்தி கொண்டிருந்த மனோரதியக்காதலைச் சித்தரிக்கிறது. இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒஸ்கார் வைல்ட் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே-1942இல்-உருது நாவலாசிரியையான இஸ்மத் சுகாட்டாயின் Lihaf ( The Quilt ) நாவல் வெளியாகிறது. எஜமானிக்கும் வேலைக்காரிக்கும் இடையிலான பெண்சமப்பாலுறவு நாவலில் கையாளப்பட்டிருந்ததால் சுகாட்டாய் மீது வழக்குத் தொடரப்பட்டது. முப்பதுகளில் நடந்து முடிந்திருந்த Lady Chatterley's Lover - D.H.Lawrence, Ulysess - James Joyce வழக்குகளின் தீர்ப்புகள் நிகழ்த்திய தாக்கமோ என்னவோ நீதிமன்றம் மிக முற்போக்கான தீர்ப்பை வழங்கி சுகாட்டாயை விடுவித்தது.
நீண்ட கால மௌனத்தைக் கிழித்துக் கொண்டு வெளிவந்த கமலாதாஸின் My Story பதின்மப் பருவப் பெண்சமப்பாலுறவைக் காட்டியது. இளம் ஆசிரியை மீது தனக்கு ஏற்பட்ட சபலத்தையும் கமலாதாஸ் அதில் பதிவு செய்திருந்தார்.
வெகுசனப் பண்பாட்டுத் தளத்தில் சமப்பாலுறவு பற்றிய கதையாடல்கள் ஆரோக்கியமாய் இருந்து ஞாபகமில்லை (இந்தியா டுடே ஓரளவு விதிவிலக்கு). மிக மலிவு ரக நாவலான Strange Obsession (Shopa De 1993), அதன் பெண்சமப்பாலுறவுச் சித்தரிப்புகளால் பெற்ற சந்தை வரவேற்பும் இதைத் தொடர்ந்து வெகுசன ஊடகங்களில் நடந்த உற்சாகமான சர்ச்சைகளும் தனித்த சமூகவியல் ஆய்வுக்குரியவை.
80களின் நடுப்பகுதியிலிருந்தே காத்திரமான விவாதங்கள் எழுகின்றன. பெரிதும் புலம்பெயர் இலக்கியவாதிகளிடமிருந்தே இவை எழுந்தன. அவர்களது புலம்பெயர் வாழ் சூழலும் அதன் சுதந்திரத்தன்மையும் இதற்கான காரணங்களாயமையலாம்.
(சமப்பாலுறவு பற்றிய கதையாடல் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப் படுவதையும் அது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மனங்கொள்ள முடிந்தாலும் சமூகப் பொருத்தப்பாடு கருதி தெற்காசிய எழுத்தாளர்களது பிரச்சனைகளே இங்கு ஆராயப்படுகிறது)
மிகக்குறைந்தளவிலான எழுத்தாளர்களே சமப்பாலுறவாளர்களின் சுயத்துக்கும் அடையாளத்துக்கும் இடையிலான மோதுகை, சுயத்தைக் கட்டமைத்த இனத்துவ, காலனிய, பின்காலனியக் கதையாடல்கள், இந்தியப் பெருங்கதையாடலில் சிக்குண்ட உடல் என எழுத முன்வருகிறார்கள். ப்ராவுல்லா மோஹந்தி(Prafulla Mohanti), அகா ஷாகிட் அலி(Aga Shahid Ali), அன்ட்ரியூ ஹார்வீ(Andrew Harvey), சுனிட்டி நம்ஜோஷி(Suniti Namjoshi), விக்ரம் சேத்(Vikram Seth), ஷ்யாம் செல்வதுரை போன்றோரை இவ்வாறு அடையாளப்படுத்த முடியும்.
இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட விக்ரம் சேத் தனது புனைவுகளில் பாலியல் ரீதியான சுயத்துடன் முரண்பட முடியாது என்பதை ஆழமாக வலியுறுத்தும் ஒருவர்.சுய அடையாள ஏற்பினையும் குற்றவுணர்வு நீக்கத்தையும் பேசுவன விக்ரம் சேத் பிரதிகள்.
நாக்பூரில் பிறந்து பழைய டெல்லியில் வளர்ந்து பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த அன்ட்ரியூ ஹார்வியின் One Last Mirror, Burning House போன்ற நாவல்கள் மிக வெளிப்படையான மொழியிலமைந்தவை. ப்ராவுல்லா மோஹந்தியின் தற்புனைவான ‘Through Brown Eyes’ இனவாத வன்முறை பெருகும் ஐரோப்பியச் சூழலில் சமப்பாலுறவினை ஆராய்கிறது.
சுனிட்டி நம்ஜோஷியின் Feminist Fables தொன்மப்பிரதிகளையும் தேவதைக் கதைகளையும் பெண்ணிய-சமப்பாலுறவு நோக்கில் மறுவாசிப்புச் செய்கிறது. இவரது புனைவுகளும் (எ.கா - Conversation of a cow) சமப்பாலுறவினை எழுதி வெளித்தெரிய வைக்கும் முயற்சிகளே.
தீவிர பெண்ணியலாளரும் பெண்ணிய அரசியலாக்கம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான சுனிட்டி நம்ஜோஷியும் ஷ்யாம் செல்வதுரையும் மாத்திரமே தமது சம்ப்பாலுறவு அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள். மற்றையோர் தீவிர கவனத்துடன் த்மது அடையாளத்தினை மறைத்துக் கொள்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் பெரும் பாழ்வெளியை எழுதிக்கடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. Christopher Isherwood, Truman Capote, Gore Vidal போன்றோருடன் தொடங்கி Allan Hollinghurst, David Sedaris என நகரும் அமெரிக்க ஐரோப்பிய சமப்பாலுறவு எழுத்தே பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறது. எ.கா – ஆலன் ஹோலிங்ஹர்ஸ்ட்டின் On the line of beauty புக்கர் பெற்ற போது எழுந்த சர்ச்சை. சமப்பாலுறவை வாழ்விலும் கலையிலும் கொண்டுவந்த பாஸ்பின்டெரின் ஜேர்மனில் கூட Homophobia அகன்றபாடில்லை. ஆளானப்பட்ட அமெரிக்காவின் ஒஸ்கார் கூட அங் லீயின் Broke back Mountainஇற்கும் ஸ்டீபன் டால்டிரையின் The Hours இற்கும் என்ன செய்தது? ( இவ்விடத்தில் Broke back Mountainஇனை Bareback Mounting என conservatives சினிக்கலாக எழுதியது ஞாபகம் வருகிறது.

2
சமப்பாலுறவு வெளி பற்றிய கதையாடல்கள் 90களின் பின் தமிழில் அரும்புகின்றன. இது குறிது எழுதியோராக – நானறிந்தவரை – ஜெயமோகன், சாரு நிவேதிதா, பிரேம்-ரமேஷ், மாலதி மைத்ரி, லஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி, திசேரா ஆகியோரைக் குறிப்பிட முடியும்.
ஜெயமோகனதும் (விஷ்னுபுரம் நாவலின் குறித்த சில பகுதிகள்) சாரு நிவேதிதாவினதும் பிரதிகள் சமப்பாலுறவு மீதான குற்றவுணர்வையும் அருவருப்பையும் ஏற்படுத்தியபடி – ஆனால் கலகம் செய்யும் பாவனையில் எழுதப்பட்ட பிரதிகள் அவை.
லஷ்மி மணிவண்ணனது கவிதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு குறித்த விவரணைகளைக் காண முடியும் (சங்கரின் தொடுதலில்/எழுந்து நெளிகிறது/ சங்கருக்குக் கதவற்ற / எனது வீடு). பிரேம்-ரமேஷ், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரது கவிதைகள் குற்றவுணர்வேதுமற்று சமப்பாலுறவை ஆராதிப்பவை. இணையின் பால் சுட்டப்படாது எழுதப்பட்ட கவிதைகளை சமப்பாலுறவு நிலை நோக்கிலான வாசிப்பில் கொண்டாட்டங்களென எதிர்கொள்ள முடியும். மாலதி மைத்ரி தனது கட்டுரையில் (செம்புலப்பெயல் நீர்) சமப்பாலுறவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கிறார்.
ஷோபா சக்தியின் சிறுகதைகள் சிலவற்றில் சமப்பாலுறவு சித்தரிக்கப் படுகிறது. தேசத்துரோகி தொகுப்பில் உள்ள ‘காய்தல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. (அவரது கதை சொல் முறையின் பெருந் தோல்வி அக்கதையே என்பது வருந்தத் தக்கது.)
திசேராவினுடைய சிறுகதை (‘கண்ணியத்தின் காவலர்கள் – வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பில் உள்ளது) சமப்பாலுறவாளர்களை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தும் இந்துத்துவ மரபு தன்னை moral police ஆக வடிவமைத்துக் கொள்வதை parody செய்கிறது. ஆனால் வெறும் மோஸ்தர் விவகாரமாகவும் அரசியல் ஆழநுணுக்கமற்ற எதிர்ப்பிலக்கியப் போலியாகவும் அக்கதை எஞ்சி விடுகிறது.
தமிழில் சமப்பாலுறவு வெளி குறித்து இதுவரை எழுதப் பட்டவற்றில் சிறந்த பிரதிகளென பிரேம்-ரமேஷினுடைய பிரதிகளைக் குறிப்பிட முடியும். : பெண்சமப்பாலுறவு பற்றிய பிரேம்-ரமேஷின் கதையான ‘அங்கும் இங்கும் உடல்கள், இங்கும் அங்கும் கதைகள், கலாச்சாரத்தின் வழி சமைந்த மூன்றாமுலகப் பெண் மனமும் உடல்ச்சலனங்களும் தீராது தமக்குள்ளேயே நிகழ்த்தியவாறிருக்கும் மோதுகைகளைப் பரிசீலிக்கிறது.
ஆண்சமப்பாலுறவு வெளியினுள் நிகழும் ஆண்டான்-அடிமைத் தர்க்கம் , சமப்பாலுறவாளர்களின் மனச்சிக்கல்கள்களை ஆராய்ந்து முன்வைக்கும் ‘மனவெளி நாடகம் சிறுகதை கவித்துவமான புனைவு முயற்சி.
உள்ளிணைப்பு:
ஷ்யாம் செல்வதுரையின் புனைவுகள்
ராஜீவ விஜேஸின்கவின் 'Days of Despair' உம் சரி ரொமேஷ் குணசேகரவின் 'Reef'உம் சரி சமப்பாலுறவைச் சித்தரித்தாலும் அவற்றின் கதைகள் சமப்பாலுறவை மையங்கொண்டமையவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் இலங்கை எழுத்தாளர்களில் ஷ்யாம் செல்வதுரையே சமப்பாலுறவை மையப்படுத்திய நாவலை எழுதியவர். Funny Boy இல் கதை சொல்லி கதை சொல்லி தனது 'வித்தியாசத்தை' உணர்ந்த படி வளர நேர்கிறது.
Lambda, W.H.Smith First Novel Award போன்ற பல சர்வதேச விருதுகளை வென்ற ஷ்யாம் செல்வதுரை தனது Funny Boy நாவலை சுயசரிதைத் தனம் மிக்கதென ஏற்றுக் கொள்கிறார். அந்தளவிலேயே மனத்தடைகள் ஏதுமற்ற ஒருவராக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
சிங்கள-தமிழ் கலப்புத் தம்பதிகளின் புதல்வனான ஷ்யாம செல்வதுரை தற்போது கனடாவில் அவரது துணைவருடன் வசித்து வருகிறார். சுவாரசியமான கதைசொல்லியான இவரது மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன (Funny Boy, Cinnamon Gardens, Swimming in the monsoon sea).
குற்ற உணர்வற்ற பாவ ஒப்புதல்த் தொனியில் எழுதப்பட்ட கதையைக் கொண்டது Funny Boy. அர்ஜி செல்வரத்னத்தின் பதின்ம வயதுகளைச் சொல்கிறது நாவல்: அர்ஜி பெண் தன்மை மிக்கவனாகவும் பெண்போன்மை நிலைக்கான உந்துதல் உடையவனாகவும் (effeminate tendencies) இருப்பதால் ‘Funny’ என்ற அடைமொழி கொண்டழைக்கப் படுகிறான். தோழமையற்ற வளர்சூழலும் அதிகரிக்கும் இனவன்முறைப் பின்னணியும் சேர்ந்த கதைக்களனில் அர்ஜியின் பாடுகள் எழுதப்படுகின்றன.
ஆறு தனித் தனியான கதைகளாகவும் ஒன்றுசேர்த்து வாசிக்கையில் திருப்திகரமான நாவலாகவும் இருக்கும் வண்ணம் கட்டமைக்கப் பட்ட பிரதி ஓர் வெற்றிகரமான Bildungsroman ஆகத் தன்னை நிறுவிக் கொள்கிறது.
அர்ஜியின் பொழுதுகள்: கொடுங்கனவினுள் மலர்தல்
அர்ஜியின் உறவினர்கள் ஒன்றுகூடும் ஞாயிற்றுக்கிழமையொன்றின் சம்பவங்களுடன் தொடங்குகிறது நாவல். அர்ஜியின் மாமா, மாமிகள் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒன்றுகூடும் அந்த ஞாயிற்றுக்கிழமைகள் அர்ஜியின் முரண்பாடுகளை வெளித்தெரிய வைக்கும் களங்களாக அமைந்து விடுகின்றன.
சிறுமிகள் கொல்லைப் புறத்தில் தனியாகவும், சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேறோரிடத்திலும் விளையாடுவது வழக்கமாயிருக்கிறது. அர்ஜி தான் பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விரும்பியதாகக் கூறுகிறான். அர்ஜி இயல்பாகவே கற்பனைத் திறன் மிக்க அழ்கியல் உணர்வுகளுடைய ஒருவன். ஆண் சிறுவர்களுடைய விளையாட்டுக்கள் மீற முடியாத விதிகளால் அமைந்து வறண்டு போயிருப்பதால், கற்பனச் சுதந்திரத்தைக் கொண்டாடும் தேவதைகதைகளது ‘போலச் செய்தல்கள் அவனை ஈர்க்கின்றன. அர்ஜியினது கற்பனைத் திறன் அப் போலச் செய்தல்களில் புதிய திருப்பங்களைக் கொண்டுவர சுவாரசியமான முடிச்சுக்களை ஏற்படுத்த உதவுகிறது. ஆண் சிறுவர்களது வெளியில் இகழ்ச்சியை எதிர்கொள்ளும் அவனுக்கு பெரிய அங்கீகாரத்தை சிறுமிகள் வழங்குகின்றனர்.
அர்ஜியினது ‘வினோதங்கள் வெளித்தெரியத் தொடங்குகையில் அவன் மூச்சு விடுவதற்கென்று இருத ஒரேயொரு வெளியும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. சேலை உடுத்துதல், நகைகள் அணிந்து அழகு பார்த்தல் போன்றவற்றின் மீது அர்ஜிக்கு இருந்த விருப்பங்கள் மிகக் கடூரமாக எதிர்கொள்ளப் படுகின்றன.
அர்ஜியின் சிறுபிள்ளைத் தனமும் அப்பாவித்தனமும் மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல அற்றுப் போவதை ஓர் மெல்லிய மலரின் இதழ்கள் சருகாகி உதிர்வதையொத்த துயரத்தொனியுடன் எழுதுகிறார் ஷ்யாம் செல்வதுரை.அர்ஜியின் செயல்பாடுகளனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகின்றன. தன் மீதான வன்முறையை அர்ஜி நினைவு கூர்ந்து பதிவு செய்யும் இடங்கள் கவித்துவ பயங்கரமும் சோகமும் நிரம்பியவை: "As I looked at her, I could almost hear the singing of the cane which would be followed by the searing pain." "Soon I would have to turn around and go back to my parent’s house, where Amaachchi awaited me with her thinnest cane, the one that left deep impressions on the backs of our thighs, so deep that sometimes they had to be treated with Gentian Violet. The thought of the cane as it cut through the air, humming like a mosquito made me wince even now, so far from it".

நேரடியான உடல் ரீதியான வன்முறை பற்றிய பதிவுகளை விடவும் உளவியல் ரீதியாக அர்ஜி பலவீனப் படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அனேகம். சிறில் மாமா "Ey Chelva, Looks like you have a funny one here" (அர்ஜியைப் பற்றி) என்று கூறுமிடம், அர்ஜியின் தாய் நளினி ‘because the sky is so high and the pigs can’t fly’ கூறுமிடமும் அழித்தகற்றவியலாப் புறக்கணிப்பின் மிகைச்சித்திரத்தை* அர்ஜியில் வரைவதை காட்டுகிறார் ஷ்யாம் செல்வதுரை.
நம் கலாச்சாரம் அங்கீகரித்தவாறேயிருக்கும் வன்முறைகளின் மீதான மீள்பார்வையை கோரி நிற்கும் சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் வந்து போகின்றன. மேலே கூறப்பட்டவற்றுக்கு மேலாக நாவலில் வரும் விக்டோரியா அக்கடமி அதிபரான ‘பிளக் ரை நம் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறையின் இன்னோர் குரூர முகம். அர்ஜியின் முன் வன்முறையும் சவால்களும் வரிந்து கட்டிக் கொண்டு நின்றாலும் அவன் சமரசம் பண்ணிக் கொள்வதில்லை. அவன் தன்னை தொடர்ந்து வலியுறுத்துபனாக இருக்கிறான். வன்முறையை அதன் அறத்தை தனியோர் ஆளாய் எதிர்க்கும் ஒருவன் அவன். நாவலின் பிற பாத்திரங்கள் வன்முறையுடன் சமரசம் செய்து கொள்பவர்களே: இனவேறுபாடு காரணமாக ராதா அத்தை அனிலுடனான தனது உறவைத் துண்டித்துக் கொள்கிறாள், நளினி தனது முன்னாள் காதலனான டாரியை விடுவிப்பதற்கான முயற்சியைக் கைவிடுகிறாள். அர்ஜியின் தந்தை செல்வரத்னம் இன்னோர் உதாரணம்: அழுத்தங்களுக்குப் பயந்து வீட்டில் தன்கியிருந்த ஞெகனைக் கைகழுவி விடுகிறார். அர்ஜி மாத்திரமே வன்முறையை அலட்சியப்படுத்துவதினூடு தன்னை வலியுறுத்துபனாக இருக்கிறான்.
அர்ஜியின் தந்தை அவனது பெண்தன்மையைக் களையவென ஆண்கள் பாடசாலையான விக்டோரியா அக்கடமிக்கு அவனை அனுப்புகிறார். பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடாதிருக்கும் படி அர்ஜி எச்சரிக்கப்படுகிறான். கிரிக்கெட்டினுள் பலவந்தமாகத் தள்ளப் படுகிறான். ஆனால் அனைத்து அழுத்தங்களுக்கும் நேர்மாறாக விக்டோரியா அக்கடமியில் முழுமையான சமப்பாலுறவாளனாக அவன் பரிணமிக்கிறான். விக்டோரியா அக்கடமியில் ஷேகனுக்கும் அர்ஜிக்கும் இடையே இடம்பெறும் நெருக்கமும் உறவின் தருணங்களும் ஒரே சமயத்தில் கிளர்வையும் துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும் வலிமை மிக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாவலில் பதிவுறும் அர்ஜியின் பதின்ம வயது வரலாறு பல முக்கிய உண்மைகளைக் கவனப் படுத்துகிறது. அர்ஜி சமப்பாலுறவாளனானது அவனை மீறிய சூழ்நிலைகளில் என்பது மீளமீள வலியுறுத்தப் படுகிறது. இது ஏற்கனவே உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்ட போதும் homophobic சூழலில் புரிந்துணர்வை ஏற்படுத்தவல்ல அன்பான கடிதம் போலிருக்கிறது நாவலின் சமூக முக்கியத்துவம்.
Funny Boyக்கு அடுத்து வெளிவந்த Cinnamon Gardens 1920களில் நடக்கும் கதையைக் கொண்டது. தனது சுய அடையாளத்தை வலியுறுத்தவோ ஏற்கவோ முடியாது திணறும் பாலேந்திரன் மீதான விமர்சனமாக, இலங்கையின் ஆதிக்க சாதியினரின் போலிமதிப்பிடுகளையும் hypocrisyயையும் ஆவணப்படுத்தும் பதிவாகவும் நாவல் அமைகிறது.
மூன்றாவது நாவலான Swimming in the monsoon sea மேலைக்கண்ணைத் திருப்திப் படுத்தும் புனைகதையாளராக ஷ்யாம் செல்வதுரையைக் காட்டுகிறது. ஆபத்தான Pop Literature போக்கினுள் ஷ்யாம் இழுக்கப்படுவதை இது குறித்து நிற்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு நாவலின் தரம் வீழ்ந்திருக்கிறது. Young Adultsக்கான புனைவு என்றே இது விளம்பரப் படுத்தப் படுகிறது. ஆனாலும் இலங்கையின் எதிர்-சமப்பாலுறவு நிலைப்பாட்டை சித்தரிக்கத் தவறவில்லை நாவல்.
*
எனது புழங்கு வெளியெங்கும் பல அர்ஜிக்களை நான் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன். தனித் தனியான பெயர்கள் அவர்களுக்கிருந்தாலும் ‘பொன்ட்ஸ் என்கிற பொதுப்பெயரால் அவர்கள் அடையாளப்படுத்தப் படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நானும் தான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்: நாணிக்கோணியபடி அவர்கள் திருமணம் செய்து கொள்வதை – பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை – வேலை அது இதென்று திரிவதை – உள்ளே அலைந்துலைந்து செத்துப் போவதை-அவர்களை அவர்கள் எழுதுவதாயில்லை.
இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்று யாராவது பேனையைத் தூக்கி விடுவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன். அருந்ததி ரோய் கூறுவது போல ‘They are not voiceless. They are deliberately silenced or their voices are preferably unheard’.
குரலற்றவர்களின் குரலாயிருக்கிறோம் என்பதன் வன்முறையைப் புரிந்து கொண்டு நாம் இதன் மீது எழுப்பும் ஆரோக்கியமான விவாதங்கள் மாத்திரமே சூழலின் இறுக்கத்தை தளர்த்தி சமூக இயங்கு தளங்களை சமப்பாலுறவாளர்களின் செயற்பாடுகளுக்கென திறந்து விடும் வல்லமையுள்ளவை.
குறிப்புகள்:
* - சல்மாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்
1 – மேலும் வாசித்தறிய - * Same Sex Love In India: Readings from History and Literature – Saleem Kidwai, Ruth Vanita
* Facing the mirror: Lesbian Writings From India – Aswini Sukthankar – Penguin India
2 – Funny Boy – Novel by Shyam Selvadurai – Penguins India
பொதுவாக இலங்கை ஆங்கில இலக்கியம் பற்றி தமிழில் கதையாடப் படுவது குறைவு. நம் கவனிப்புக்குரிய பல பிரதிகள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கின்றன. ராஜீவ விஜேசின்கவின் Acts Of Faith 83 கலவரத்தைப் பற்றிப் பேசுகிற்து , இந்தியத் தலையீட்டைப் பேசும் அவரது மற்றொரு நாவல் Days Of Despair. ஜீன் அரசநாயகம் ஏற்கனவே கவனப்படுத்தப்பட்டுள்ளார் எனினும் அவர் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதில்லை. இந்த நிலமையே ஷ்யாம் செல்வதுரை கவனிப்புப் பெறாததற்கு காரணமாயிருக்கலாம். இக்கட்டுரையின் நோக்கம் இனப்பிரச்சனை பற்றிய ஒன்றல்ல. மேலும் இலங்கயின் எல்லைக்குள் இந்த நாவலுக்கு அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை. ஆனால் பேசப்படாதவை பற்றிய பிரக்ஞையை தூண்டும் ஒரு குறிப்பாக இது அமையட்டும். Funny boy -இல் இடம்பெற்ற காலக் குளறுபடி குறித்து ஏற்கனவே பேசப்பட்டுள்ளது (செல்வா கனகநாயகம் கட்டுரை). ஆனால் பிற விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
அர்ஜியின் வளர்ச்சிக்காலப் பின்னணியாக இனவன்முறை சித்தரிக்கப்படுகிறது. நாவலின் இந்த அம்சம் தனியான விவாததுக்குள்ளாக்கப் படவேண்டிய ஒன்று. நாவலினிறுதி அத்தியாயமான ‘The Riot Journal: An Epilouge’ இனை மொழிபெயர்க்கும் யோசனை கூட எனக்கிருந்தது.
நாவல் 83 கலவரத்தை ஓர் தனித்த நிகழ்வாகக் காட்ட முயற்சி செய்யவில்லை. நாட்டில் 83க்கு முன்னும் பின்னும் நிலவிய நிலவிக்கொண்டிருக்கிற பெருவன்முறையின் வெளித்தெரிந்த வெடிப்பாக அது சித்தரிக்கப்படுகிறது. இனக்கலவரங்களின் போது பெரும்பாலான சேதத்தை விளைவித்தது சந்தர்ப்பவாத வன்முறையே என்கிறது நாவல். (எ.கா- பண்டுரத்னே முதலாளியின் மகன்களும் நண்பர்களும் ‘Death to all tamil paraiahs’ என செல்வரத்தினத்தின் கடை ஜன்னல்களில் எழுதுவது.)
விக்டோரியா அக்கடமியில் சல்கொடோ தமிழ் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றிய விவரணைகளை சிறு பிள்ளைகளுடையதுதானேயெனப் புறமொதுக்கி விட முடியாது.
ஷ்யாம் செல்வதுரை இனங்களுக்கிடையிலான முறுகல்நிலை தலமைகளாலேயே தோற்றுவிக்கப்படுகிறது என்ற கருத்துடையவர் என்பதை அவரது Time (August 25 2003) கட்டுரை உறுதி செய்கிறது. நாவலிலும் இந்தப் பார்வை கணிசமான அளவு வலியுறுத்தப்படுகிறது. சிங்களவனான சல்கொடோவின் தொல்லைகளிலிருந்து அர்ஜியைப் பாதுகாப்பதும் சிங்களவனான ஷேகன் தான். சூழல் சார்ந்த வாசிப்பில் இவை பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டது போல நாவலின் இனமுறுகல்க் கையாள்கை தனியான விவாததுக்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று.


இரவு வீடு - அதீதன் கவிதை


நாளைடைவில்
இந்த இரவு ஒரு வீடானதும்
அதில் வசிப்பவர்களாக
நாமிருந்து தானே தீரவேண்டும்

நமக்கான கனவுகள்
ஒரு மேஜையொன்றில் பரிமாறப்பட்டிருக்கலாம்
என் நண்பனே
கனவினை நாம் தின்னத் தொடங்குகையில்
பயத்தின் நொடி வீசுவதாக
தயவு செய்து கூறாதிருப்பாயாக
அவ்வாறு கூறுவாயாகில்
வீட்டிற்கு கதவுகள் இல்லாதிருப்பதை
வெகு சீக்கிரமாகவே உணர நேரிடும்

அவ்வீட்டின் எந்த மூலையில்
நீ உன்னைப் புணருவாய்
என் நண்பனே
இல்லாதிருப்பதாய் நாம் நினைக்கும் குறி
தன்னை உணர்த்தும் தருணத்தில்
நம் வீட்டில் ஜன்னல்கள் இல்லாதிருப்பதை
உணர்வோம்
மனவாதையின் உடல் நீட்சியெனத்
துடிக்கும் உன் குறியின் ஸ்கலிதம் விழுங்கித்
தணியும் என் தாபத்தின் தொடக்கத்தில்
எழுந்து நெலியும் சர்ப்பம் தீண்டிய
இரவின் சுவர்கள் நீலமாகப்
பெயர்த்துத் தின்னலாம் சுவர்க் காறைகளை

விழிப்பின் தருணத்தில் காய்ந்த ஸ்கலித்த்தை
தொடைகளில் உணர்ந்து
குளியலறைக்குச் செல்கையில்
உடலில் ஒட்டியிருக்கும்
இரவின் ஸ்கலிதத்தை நாம் உணர்வதில்லை
புன்னகைத்தபடி
கதவுகளைத் திறந்து வெளிவருகிறோம்
பல்லிடுக்குகளில் இருளாய் ஒளிர்கிறது
இரவின் ஸ்கலிதம்

என்ன செய்யலாம் எனது நண்பனே
நமக்குத் தெரியாமலே நம்மைப் புணர்த்தி விலகும்
வசீகரமிக்க இரவின் குறியை


குருதியால் அமையும் தேசம்
வாதைகளால் அழியும் மனிதன்
--அஜீப் பொன்னையா--


நூல் - ம்
ஆசிரியர் - ஷோபா சக்தி
வெளியீடு - கருப்பு பிரதிகள்


மூன்றாம் உலக நாடுகளில் தெடர்ந்து இடம் பெற்றுவரும் போர்கள் அவற்றின் மீள் நிகழ்த்துகைகள் அழிவின் சாத்தியப்பாடுகள் பற்றிய துல்லியமானதும் தவிர்க்கமுடியாதவையுமான எதிர்வு கூறல்களால் இருப்பு அல்லது நிலவுகை சூழப்பட்டிருக்கும் நிலையில் மனித இருத்தல் குறித்து நாமனைவரும் சிந்திக்கவேண்டிய வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தகைய சிந்தனை கலை இலக்கியத் தளங்களில் நீட்சியடையும் போது உருவாகும் படைப்புகள் போர் புரட்சி என்பவற்றின் பின்னணியில் மனித இருப்பை ஆராயும் தன்மையுடையவையாக வெளிவருகின்றன. ஈழத்துச்சூழலில் இத்தகைய புனைவுகளை உக்கிரத்துடன் புனைந்து வரும் ஷோபா சக்தியின் சமீபத்திய நாவலான ‘ம் பலவகைகளில் கவனிப்புக்குரிய ஒன்று.
போரின் முன் மனித உயிரின் பெறுமதி இழப்பின் அவலம் இடம் புலம் பெயர் வாழ்வின் அவலம் சமகாலத்தேவைப்பாடு என்று நிறையவே பெருங்கதையாடல்கள் நிகழ்ந்து வரும் காலமிது.போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறவே இல்லை.சமகாலத்தேவைப்பாடு என்ற ஓர் எண்ணக்கருவை தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துக்கெண்டு பிறரையும் அதன்படி செயற்பட வைப்பதே பெரும்பான்மை இலக்கியவாதிகளது நிலைப்பாடாக இருக்கிறது.ஆதிகார மையங்களது ஃபாஸிசக்கரம் நீளமுடியாத தொலைவில் இருப்போர் கூட சுயதணிக்கையுடனேயே கருத்து வெளியிடுவதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
தியாகம் அர்ப்பணிப்பு வீரம் போன்ற உணர்வு வயப்பட்ட சொற்களை புனிதப் பீடத்தில் ஏற்றிப் பிரச்சாரம் பண்ணிக்கெண்டிருப்பது மையநீரோட்டம். போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல்கள் அனைத்துமே மையநீரோட்டப் பார்வையின்படி எதிர்க்கதையாடல்கள் தான்.மேற்கூறிய கதையாடல்களின் உக்கிரமான வெளிப்பாட்டிற்கு எழுதப்படாத அதிகாரத்தின் சொல்லப்படாத தணிக்கை விதிகள் ஒத்துப்பேவதில்லை. அத்துடன் இலங்கையில் இத்தகைய வெளிப்பாட்டிற்கான இயங்குதளமும் அரிதான ஒன்றாகவே தெடர்ந்தும் இருந்து வருவது சகிக்க முடியாத ஒன்று.
ம் மை பிரதியியல் (Textual) ஆய்வுக்கும் சூழல்சார் (Contextual) ஆய்வுக்கும் உட்படுத்தும் ஒருவன் கேள்விகளுக்குள் புதையுண்டு போக வேண்டியவனாகிறான்.ஏனெனில்: மக்களின் பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசு மக்களின் விடுதலை சுதந்திரம் என்பவற்றுக்கென கட்டமைந்ததாகக் கூறப்படும் தமிழ்த்தேசியவாத அமைப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் பின்னாலுள்ள கருத்துருவாக்க மையங்கள் என்பவற்றின் மீதான ஆய்வுக்கு நிகரானதே ஒரு ஈழத்து இலக்கியப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு. ஆகவேம்மினை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு என்பது பிறிதொரு வகையில் ஈழத்தின் சமகால அரசியலை ஆராய்வதாக அமையும். ‘ம்மின் விமர்சகன் நாவலின் கதையாக்கத்துக்கும் அமைப்பாக்கத்துக்கும் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் சமூக அமைப்பை பகுப்பதற்கு மனத்தடையற்றிருக்க வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுத் தோற்றப்பாடு மற்றும் சமநிலையை ஒரு நவீனத்துவப்பிரதி சிதைத்தே ஆகவேண்டும். அத்தனை சிதைவுகள் ரணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார மையங்கள் போர்த்தி விடும் வெண்ணிறப் போர்வையை ‘ம் கிழித்தெறிவதால் அது தன்னை ஒர் உக்கிரமான நவீனத்துவப் பிரதியாக முன்னிறுத்துகிறது.ம்மின் சித்தரிப்பும் கதையாடலும் நாவலைக்கடந்து செல்ல முடியாத நிலையை வாசகனிடத்து ஏற்படுத்துவதை உணர முடிவதால் அது தன்னை ஓர் சிறந்த படைப்பாகவும் முன்னிறுத்திக்கொள்கிறது.
தமிழ்த்தேசியத்துக்கான ஒருங்கிணைவு ஏகப்பிரதிநிதித்துவம் காவியத்தலைவன் ஒன்றிணைந்த இலங்கை போன்ற நுண்ணரசியல் மிகு செற்பிரயோகங்கள் மூலம் சமூக அமைப்பின் அடிப்படை அலகான தனி மனித இருப்பு நூதனமாக மறுதலிக்கப்படுகிறது. மறுதலிக்கப்பட்ட இருப்புக்குச் சார்பான எப்பிரதியும் ‘பயங்கரவாதிகளின் பிரச்சாரப்பிரதி என்றும் ‘துரோகியால் எழுதப்பட்ட பிரதி என்றும் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு மாற்று வெளிகளை இல்லாதொழித்தும் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கியும் ஆதிக்க அமைப்புகள் தம்மைப் பாதுகாத்துக்கௌ;ளும் நிலையில் சமூக அமைப்பின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பிரக்ஞைக்குட்படுத்தும் ஒரு செயலே சமநிலையைக் ;குலைத்தல் என்பதாகிறது.மேற்புறத்தின் தொகுப்பு நிகழ்வான மௌனத்தை மீறி அதன் நிகழ்த்துகைக்கு அடியில் இருக்கும் புதைக்கப்பட்ட கூச்சல்களையும் அலறல்களையும் வெளிக்கெணர்தல் சமகால அரசியல் இலக்கியப் பிரதியொன்றின் கடமையாகிறது.அக் ;கடமையைத் திறம்படச் செய்யும் ‘ம் சமகாலத்து புனைவுகளில் முதலிடம் பெறும் தகுதியைக் கெண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
புல விதமான தூண்டல்களை சமூக இருப்பு மீது பிரயேகிப்பதுன் மூலம் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கும் காரியத்தைச் செய்கின்றன நமது அதிகார நிறுவனங்கள். தனி மனித இருப்பின் உடல்வெளி மற்றும் மனவெளி மீது முறையே ஒடுக்குதலையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் செலுத்திச் செலுத்தியே அந்த இருப்பை செயல்பாடற்றதாகவும் எந்நிலையிலும் ‘ம் கொட்டக்கூடியவனாகவும் வைத்திருக்கும் உத்தி இன்று நேற்று ஏற்பட்டதல்ல: அதிகாரத்தின் ருசி என்று மனிதனுக்குப் புரிந்ததோ அன்றிலிருந்தே சமூக வெளியினுள் செயற்பட்டவாறே இருக்கிறது இந்த உத்தி.மதம் குடும்பம்; சாதி போன்ற அமைப்புகளை இவ்வுத்திக்கான நிகழ்த்துவெளியாகப் பயன்யடுத்திக்கொள்கிறது அதிகாரம். கலாச்சார சீர்திருத்தச் சட்டவாக்கங்கள் அறவியல் மதிப்பீடுகள் என்பனவும் இந்த வகையினவே.முன்முடிவுகளினதும் நேர்கோட்டு ஆய்வுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவையனைத்துமே தமது செயற்பாடுகளின் மூலம் தனி மனித இருப்பை மிக மோசமாகச் சிதைக்கின்றன.இவ்வாறு சிதைக்கப்பட்ட தனி மனித இருப்பு வர்க்கம் சாராததாக – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியாக மாறுகிறது.
கருத்துருவாக்க கருத்தியல் ஆதிக்க நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் எந்தவொரு சுயாதீனமான இருப்பும் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது. நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாத தனி மனித இருப்பு இயல்பாகவே பிறழ்கிறது.பிறழ்ந்த இருப்பின் நிலவுகை தடை செய்யப்பட்டு அதன் இருப்புக் குறித்த தடயம் மறைக்கப்படுகிறது. அதிகார மையங்களின் கைக்கு மீறிய இருப்புகள் பல்வேறுவிதமாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.இதன் மூலம் அவற்றின் சமூகப் பெறுமதி இல்லாதொழிக்கப்படுகிறது: அவற்றின் சமூக இயங்கு வெளி குறுக்கப்படுகிறது.இதன் மூலம் தமது ஸ்தாபன அறத்தை நிலைநாட்டிக் கொள்வதாக அதிகார மையங்கள் எண்ணங் கொள்கின்றன.இது தான் இலங்கையின் முக்கிய அதிகார நிறுவனங்கள் இரண்டினதும் பொது இயங்கியல்.இவை இரண்டினதும் தணிக்கை விதிகளை மீறி உருவாகும் பிரதி – அதிகாரத்தின் இயங்கியலை அராய்வதற்காகவேனும் அந்நியமாதலுக்கு உட்பட்டவனின் கதையாடலை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறது. இந்த ;அடிப்படையிலேயே ‘ம்மில் பிறழ்வடைந்த இருப்பு கதையாடலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் வலிமையுடைய கலக மொழி அந்த இருப்புகளிடம் மாத்திரமே உண்டு.
அதிகார மையக் கருத்துருவங்களும் எதிர்க்கலாச்சாரக் கருத்துருவங்களும் வேறுபட்டவையாகவே இருந்தாலும் அவை பிரிதித்தறிய முடியா உள் இணைப்புக்களைக் கொண்டிருப்பதை எளிதில் இனங்காணலாம். அவ்வாறான உள் இணைப்புக்களில் ஒன்றே அதிகாரத்தின் இயங்கியல் மாற்று இயங்கியலை தோற்றுவிக்கும் செயற்பாடு.இக்கருத்தின் அடிப்படையில் வர்க்கம் சாராத – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியை உருவாக்குவதும் அதிகார நிறுவனமே என்பது புலப்படும்.’ம்மின் கதை வெளியில் இதற்கான பல உதாரணங்களைக் காண முடியும்.
எதிர்ச்செல்லாடல் என்பதே அபுர்வமான நிகழ்வாகிவிட்ட இச் சூழலில் மனநோயாளிகள் என்று அறியப்படுவோரும் தன்பால்புணர்ச்சியாளர்களும் விபச்சாரிகளும் மறுத்தோடிகள் ஆகி சனாதனக் கருத்துருவங்கள் ஆதிக்க நிலையடைவதை உக்கிரமாகக் கேள்விக்குட்படுத்துகின்றனர்.அதிகாரத்தின் அசிங்கமான இயங்கியலை எதிர்க்க நினைத்தால் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட சிதைவுகளை முன்வைப்பது தான் ஒரே வழி. அதிகாரம் முன்வைக்கும் அனைத்துக் கற்பிதங்களையும் நேசகுமாரன் என்ற சிதைவை முன்வைப்பதன் மூலம் தகர்க்கிறது ‘ம்.

No comments: